தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தில்லியின் புறநகர் பகுதியான அலிப்பூரில் நிகழ்ந்துள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத கிடங்கின் சுவர் இடிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தீயணைப்புத் துறையினரால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேரில் இதுவரை 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பேசிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக தெரிவித்தனர்.
இடிபாடுகளுக்கு உள்ளான இந்த சேமிப்புக் கிடங்கு 5000 சதுர அடியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.