தில்லி: சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். 
தில்லி: சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தில்லியின் புறநகர் பகுதியான அலிப்பூரில் நிகழ்ந்துள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத கிடங்கின் சுவர் இடிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்புத் துறையினரால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேரில் இதுவரை 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பேசிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக தெரிவித்தனர். 

இடிபாடுகளுக்கு உள்ளான இந்த சேமிப்புக் கிடங்கு 5000 சதுர அடியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com