ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

 சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொலைத் தொடர்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களின் பிராந்திய அமர்வுகள்: அமைச்சர் உறுதி

தில்லில் உள்ள தொலைத்தொடர்பு தாவா தீர்வு, மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களின் பிராந்திய அமர்வுகள் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் நிறுவுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என

News image
Updated On :20 ஜூலை 2022, 10:04 pm

 நமது நிருபர்

தில்லில் உள்ள தொலைத்தொடர்பு தாவா தீர்வு, மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களின் பிராந்திய அமர்வுகள் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் நிறுவுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின்னணுத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்ததாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தில்லியில் சந்தித்து பி.வில்சன் புதன்கிழமை கடிதம் அளித்தார். அதில், "நாட்டில் பணமில்லா பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, நவீன வலுவான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் வணிக வழக்குகள் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாதது. இந்நிலையில், வழக்காடும் நுகர்வோர், வழக்குரைஞர் ஆகியோரைக் கருத்தில் கொண்டு சென்னை மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் தொலைத்தொடர்பு தாவா தீர்வு, மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகள் அமைக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
 தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ஒளிபரப்பு துறைகளில் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் அதிகார வரம்பை தொலைத்தொடர்பு தாவா தீர்வு, மேல் முறையீட்டு தீர்ப்பாயம் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பொருளாதாரம், நவீன வலுவான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை நாடு கொண்டுள்ளது. தென்மாநிலங்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தொலைத் தொடர்பு இணைப்புகள் அதிகமாக உள்ளன. வணிக ரீதியான தகராறுகளை விரைவாகவும் திறமையாகவும் தீர்ப்பதற்கு அரசு ஒரு திறமையான தளத்தை வழங்க வேண்டும்.
 கடந்த 10 ஆண்டுகளாக தில்லியில் உள்ள முதன்மை அமர்வில் சுமார் 5,100 வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும், நுகர்வோர்களும், வழக்குரைஞர்களும் நீண்ட தூரத்திலிருந்து வரவேண்டிய நிலையில், அவர்களது நலனுக்காக சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் தொலைத் தொடர்பு தாவா தீர்வு மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகளை நிறுவ தேவை ஏற்பட்டுள்ளது என்று கடிதத்தில் வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
 இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், "இந்தப் பிரச்னை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்படும்' என உறுதி அளித்துள்ளதாக பி.வில்சன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.