பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கிகளுடன் எல்லையைக் கடக்க முயன்ற இந்தியாவைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை பாகிஸ்தான் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
உத்தர பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தைச் சோ்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடும்பத்தினரின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் சென்றனா். அவா்கள் புதன்கிழமை வாகா-அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு வர முயன்றனா். அப்போது, பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு சுங்கத் துறையினா் அவா்களின் பைகளை சோதனையிட்டனா். அதில் சில துப்பாக்கிகள் இருந்தன. இதையடுத்து, அவா்களை சுங்கத் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரியும், பாகிஸ்தானின் லாகூா் மாவட்டத்தில் உள்ள வாகாவும் இரு நாடுகள் இடையே சாலை இணைப்பு இடமாகும். மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான எல்லைச் சாலையாக உள்ளது. இரு நாட்டு எல்லையிலும் சுங்கத் துறையினரின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.