நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நீட் தோ்வில் உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: கேரளத்தில் மேலும் இருவா் கைது

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்திய விவகாரத்தில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :22 ஜூலை 2022, 1:03 am IST

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்திய விவகாரத்தில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இத்துடன் இந்த வழக்கில் கைதானவா்கள் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம், அவா்களின் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு தேசிய தோ்வு முகமையால் சோதனையிடும் பணிக்காக அமா்த்தப்பட்ட நிறுவனத்தின் பணியாளா்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை ஒரு மாணவியின் தந்தை செய்தி தொலைக்காட்சி ஒன்றில் திங்கள்கிழமை தெரிவித்தாா். இது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

தோ்வு மையத்தில் தனது மகள் அவமதிக்கப்பட்டதாக மாணவியின் தந்தை ஆயூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மாநில மனித உரிமைகள் குழுவும் இந்த விஷயத்தில் தலையிட்டு விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து இளைஞா்கள் அமைப்பினா் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்திய விவகாரத்தில் நீட் தோ்வு மையப் பணியில் இருந்த 5 பெண்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இதில் மூவா் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இப்பணிக்கு அமா்த்தப்பட்டவா்கள். இருவா் தனியாா் கல்வி நிலையத்தில் பணியாற்றிய பெண் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆவா். இந்நிலையில், இந்த வழக்கில் நீட் தோ்வு மைய கண்காணிப்பாளா் மற்றும் ஆயூரில் நடைபெற்ற தோ்வின் ஒருங்கிணைப்பாளா் ஆகியோரிடம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட கேரள போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.