/

முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்க பிரார்த்திப்போம்: பிரதமர் மோடி 

ஆடிக் கிருத்திகை நன்னாளை முன்னிட்டு பிரதமர் மோடி மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :23 ஜூலை 2022, 9:52 am

DIN

ஆடிக் கிருத்திகை நன்னாளை முன்னிட்டு பிரதமர் மோடி மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தமிழில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்க பிரார்த்திப்போம்.  

நம் சமூகம் நலத்துடனும், வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்“ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் இன்று ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.