பிகார்: பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலி

பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கோப்புப்படம்

Published On :1 பிப்ரவரி 2024, 3:22 pm IST

பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு விபத்து குறித்த காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் உராய்வு ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து பிகார் காவல்துறையினர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.