திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ரூ.100 கோடி கொடுத்தால் எம்.பி., ஆளுநர் பதவி: புதிய மோசடி அம்பலம்

ரூ.100 கோடி கொடுத்தால் மாநிலங்களவை உறுப்பினர் அல்லது ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக நடைபெற்ற மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் சிபிஐ, நான்கு பேரை கைது செய்துள்ளது.

News image

ரூ.100 கோடி கொடுத்தால் எம்.பி., ஆளுநர் பதவி: புதிய மோசடி அம்பலம்

Updated On :25 ஜூலை 2022, 9:45 am


புது தில்லி: பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட, ரூ.100 கோடி கொடுத்தால் மாநிலங்களவை உறுப்பினர் அல்லது ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக நடைபெற்ற மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் சிபிஐ, நான்கு பேரை கைது செய்துள்ளது.

இதுதொடர்பாக அண்மையில் சிபிஐ, பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் தொடர்பிருக்கும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையின்போது ஒரு நபர் சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பிடியோவிட்டார். அவர் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் அதிகாரிகளைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கர்நாடகம், தில்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, மிகப்பெரிய வழக்குகளை ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் முடித்துக் கொடுப்பதாகக் கூறி பலரையும் ஏமாற்றி பண மோசடி செய்து வந்துள்ளது தெரிய வந்தது.

இது மட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றுத் தருவதாகவும், ஆளுநர் பதவியை வாங்கித் தருவதாகவும் கூறி தனிநபர்கள் பலரையும் ஏமாற்றியிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.