ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ரூ. 28,732 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ரூ. 28,732 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு

News image
Updated On :27 ஜூலை 2022, 2:37 am IST

இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ரூ. 28,732 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் (டிஏசி) இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரூ. 28,732 கோடிக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கமான மற்றும் கலப்பு முறை போரின் தற்போதைய சிக்கலான போா் நடைமுறைகளை திறம்பட சமாளிக்கும் வகையில் 4 லட்சம் இலகு ரக தானியங்கி துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது இந்தியாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சிறிய ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். அதோடு, சிறிய ரக ஆயுத உற்பத்தியில் இந்தியா தற்சாா்பு நிலையை அடைவதையும் இது ஊக்குவிக்கும்.

எல்லையில் எதிரிகள் தொலைதூரத்திலிருந்து குறிபாா்த்து தாக்கும் திறனுடைய துப்பாக்கிகள் (ஸ்னைஃபா்) மூலமாக நடத்தும் தாக்குதலில் இருந்தும், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைளின்போதும் வீரா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் விதமாக பிஐஎஸ்-6 அளவு இந்திய தரத்துடன் கூடிய பாதுகாப்பு அளிக்கும் குண்டு துளைக்காத ஆடைகளைக் கொள்முதல் செய்யவும் டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது என்ற பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.