திருச்செந்தூர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா சிறப்பு பயணிகள் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து மே 30 இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும் என்று ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நெல்லையில் இருந்து மே 30 இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் மே 31 நள்ளிரவு 11.40 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
May 30 – Nellai – Tiruchendur Unreserved Special Train Service
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











