/

நாடாளுமன்றத்தில் அமளி: இரு அவைகளும் பகல் 12 வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

News image
மக்களவை
Updated On :1 பிப்ரவரி 2024, 9:54 am

DIN

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கடந்த 7 நாள்களாக அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.

இதற்கிடையே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தம் 23 பேர் இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அவை கூடியவுடன் எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிராக கடுமையான அமளி நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.