திமுக எம்.பி.க்கள் உள்பட 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஜனநாயகப் படுகொலை’ என அச்சிடப்பட்ட முகக்கவசம் அணிந்து பிற எம்.பி.க்கள் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.
மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திமுகவின் 6 எம்.பி.க்கள் உள்பட 19 பேரும், மக்களவையில் 4 காங்கிரஸ் எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘ஜனநாயகப் படுகொலை’ என அச்சிடப்பட்ட கருப்பு நிற முகக்கவசம் அணிந்து இன்றைய நாடாளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.