காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புகையிலை பொருள்களை வாங்குவோருக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி

புகையிலை பொருள்கள் மீதான எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

புகையிலை பொருள்களை வாங்குவோருக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி

Updated On :29 ஜூலை 2022, 12:52 pm

PTI


புது தில்லி: புகையிலை பொருள்கள் மீதான எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும், இறக்குமதி அல்லது பொட்டலமிடப்படும் புகையிலைப் பொருள்கள் மீதான எச்சரிக்கை புகைப்படங்கள் மற்றும் புகையிலைப் பொருள்களால் வலிமிகுந்த மரணத்தைத் தழுவ நேரிடும் என்பது போன்ற வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்த புதிய புகைப்படம் ஓராண்டு காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு உற்பத்தி அல்லது இறக்குமதி அல்லது பொட்டலமிடப்படும் புகையிலைப் பொருள்கள் மீது புதிய புகைப்படம் மற்றும் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே மரணத்தைத்தழுவுகிறார்கள் என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.