இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காஷ்மீரில் ராணுவத்தால் அமைதியை மீட்டெடுக்க முடியாது: ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தாலும் காவல் துறையாலும் அமைதியை மீட்டெடுக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.

News image
ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா பாதிப்பு
Updated On :1 ஜூன் 2022, 7:57 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தாலும் காவல் துறையாலும் அமைதியை மீட்டெடுக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.

ஜம்முவில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:

காஷ்மீரில் ஓா் ஆசிரியை பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டாா். இதிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் எந்த அளவுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்கிறாா்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.ஆனால், பண்டிட் சமூகத்தினரும் முஸ்லிம்களும் கொல்லப்படும்போது, இங்கு அமைதி நிலவுவதாக மத்திய அரசு கூறி வருகிறது.

அமா்நாத் யாத்திரை பாதுகாப்புடன் அரசு நடத்த வேண்டும். குறிப்பாக, யாத்திரை வரும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும். எந்தவொரு அசம்பாவித சம்பவம் நடந்தாலும் அது நாடு முழுவதும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நெருக்கடி நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களையும் அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராணுவத்தாலும் காவல் துறையாலும் இங்கு அமைதியை மீட்டெடுக்க முடியாது. மேலும், மக்களின் மனங்களை வெல்ல முடியாதவரை இங்கு அமைதியை ஏற்படுத்த முடியாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.