உ.பி.யில் ரசாயன தொழிற்சாலையில் தீ: 8 தொழிலாளர்கள் பலி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 

உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூர் என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். 

எனினும் இந்த சம்பவத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீவிபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com