நாட்டில் புதிதாக 3,714 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,714 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் புதிதாக 3,714 பேருக்கு கரோனா பாதிப்பு
Published on
Updated on
1 min read

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,714 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று 4,518 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைவாக பதிவாகியுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,628 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 26,976 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2,513 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,26,33,365 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,24,708 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 13,96,169 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இதுவரை 194.27 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com