நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,714 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று 4,518 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைவாக பதிவாகியுள்ளன.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,628 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 26,976 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2,513 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,26,33,365 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.
சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,24,708 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 13,96,169 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இதுவரை 194.27 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன