மகாராஷ்டிரத்தில் திருமண விருந்து சாப்பிட்ட 60 பேர் மருத்துவமனையில் அனுமதி
மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் திருமண விழாவில் உணவு உட்கொண்ட 60-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் திருமண விழாவில் உணவு உட்கொண்ட 60-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி பிரஹலாத் சவான் கூறுகையில்,
புசாத் தாலுகாவுக்கு உள்பட்ட செம்பல்பிம்ப்ரி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமண விருந்து உண்ட பிறகு, பல விருந்தினர்களுக்கு அசௌகரியம் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து, கிட்டத்தட்ட 40 முதல் 45 பேர் அண்டை மாநிலமான ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கல்மனுரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
புசாட்டில் உள்ள பொது சுகாதார மையத்தில் 20-25 பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும் சிலர் இங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
தற்போது நோயாளிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...