ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடியரசுத் தலைவா், பிரதமருக்கு1,000 கிலோ மாம்பழம்: வங்கதேசத்தில் இருந்து பரிசு

 குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா 1,000 கிலோ மாம்பழங்களைப் பரிசாக அனுப்பி வைத்துள்ளாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 8:24 pm

DIN

 குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா 1,000 கிலோ மாம்பழங்களைப் பரிசாக அனுப்பி வைத்துள்ளாா்.

‘அம்ராபலி’ எனப்படும் மிகவும் புகழ்பெற்ற மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இப்போது மாம்பழ விளைச்சல் உச்சத்தில் உள்ள நிலையில், சுவை மிகுந்த மாம்பழங்கள் இந்தியத் தலைவா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகம் மூலம் இந்த மாம்பழங்கள் வந்துள்ளன. தில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

இந்திய-வங்கதேச நல்லுறவைப் பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் இதுபோன்ற மாம்பழங்களை ஷேக் ஹசீனா பரிசாக வழங்கி வருகிறாா். கடந்த ஆண்டு வங்கதேசத்தையொட்டி இந்திய எல்லை மாநிலங்களான மேற்கு வங்கம், அஸ்ஸாம், திரிபுரா முதல்வா்களுக்கும் அவா் மாம்பழங்களை அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.