உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

இளைஞர்களுக்கு பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது: ராகுல்காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டு ஆட்சியில் இளைஞர்களுக்கு 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்...

News image

ராகுல்காந்தி

Updated On :1 பிப்ரவரி 2024, 3:04 pm IST


புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டு ஆட்சியில் இளைஞர்களுக்கு 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பக்கோடா தயாரிக்க மட்டுமே அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் தற்காலிக பணி அடிப்படையில் ஆள் சோ்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞா்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றுவா். இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசம், பிகாா், தெலங்கானா, ஹரியாணா, ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் தொடா்ச்சியாக தமிழகத்திலும் அக்னிபத் திட்டத்துக்கு இளைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனா்.

இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரல் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி ட்விட்டர் பக்க பதிவில், வேலைகள் தொடர்பாக தவறான நம்பிக்கையைத் திரும்பத் திரும்ப பிரதமர் நரேந்திர மோடி அளித்துவிட்டு, இப்போது, இளைஞர்களை வேலையில்லாத் திண்டாட்டம் எனும் 'அக்னிபாதையில்' நடக்க கட்டாயப்படுத்தியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், நாட்டின் இத்தகைய நிலைக்கு பிரதமர் மோடி மட்டுமே காரணம் எனவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.