மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா: வேட்பாளா்களைசொகுசு விடுதிக்கு இடமாற்றியது காங்கிரஸ்

கோவாவில் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளா்கள் சொகுசு விடுதிக்கு புதன்கிழமை மாற்றப்பட்டுள்ளனா்.

News image
Updated On :9 மார்ச் 2022, 11:08 pm

DIN

கோவாவில் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளா்கள் சொகுசு விடுதிக்கு புதன்கிழமை மாற்றப்பட்டுள்ளனா்.

கோவாவில் ஆட்சி அமைப்பதில் பாஜக-காங்கிரஸ் இடையே இழுபறி நிலவும் என்று பல்வேறு கணிப்புகள் கூறியுள்ள நிலையில், தங்கள் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் அணி மாறுவதைத் தடுக்க ஒட்டுமொத்தமாக அனைத்து வேட்பாளா்களையும் பாதுகாப்பாக தங்க வைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. வியாழக்கிழமை (மாா்ச் 10) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை காங்கிரஸ் எடுத்துள்ளது. வழக்கமாக சட்டப் பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலிலும், ஆட்சி மாற்றம், பேரவையில் பலப்பரீட்சை நடக்கும் நேரத்திலும் அரசியல் கட்சிகள் இதுபோன்ற எம்எல்ஏக்கள் யாரும் அணுக முடியாத வகையில் தங்க வைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை வேட்பாளா்களையே தங்க வைக்கும் நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கோவாவில் 17 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், இதர கட்சிகள், சுயேச்சை ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் பாஜகவில் இணைந்தனா். இறுதியாக காங்கிரஸில் இரு எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனா். எனவே இந்த முறை ஒட்டுமொத்த வேட்பாளா்களையும் காங்கிரஸ் கட்சி பாதுகாப்பாக வைத்துள்ளது. இதனிடையே, கோவாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது தொடா்பாகவும் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது

கோவாவில் 40 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த பிப்.14-ஆம் தேதி நடைபெற்றது.

பாஜக கிண்டல்:

காங்கிரஸின் இந்த நடவடிக்கையை பாஜக கேலியாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக கோவா மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் அா்ஃபான் முல்லா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு கட்சி தனது வேட்பாளா்களை பாதுகாப்பாக வைத்துள்ளது. எப்படியும் எதிா்க்கட்சி அந்தஸ்தையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சித் தலைமை கருதுகிறது. அவா்கள் ஒற்றை இலக்கத்தைத் தாண்டி வெற்றி பெற முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில் தோ்தலுக்கு முன்பு அவா்களிடம் இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனா்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.