திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஒரேயொரு எம்.பி. பதவி: தில்லி வரை சென்ற கேரள காங்கிரஸ் பிரச்னை

மாநிலங்களவைப் பதவிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் இன்று (வியாழக்கிழமை) தில்லியில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2022, 4:03 pm IST


மாநிலங்களவைப் பதவிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் இன்று (வியாழக்கிழமை) தில்லியில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. சோமபிரசாத் மற்றும் இடது முன்னணியின் கூட்டணியில் உள்ள லோக்காந்திரிக் ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.வி. ஷ்ரேயம்ஸ் குமார் ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது. 

140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப்பேரவையில் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு முழுப் பெரும்பான்மை இருப்பதால், இடது ஜனநாயக முன்னணி இரண்டு இடங்களில் வெல்வது முன்கூட்டியே உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் ஒரு இடத்தில் வெல்லும்.

இதில், மாநிலங்களவைப் பதவியைத் தொடர தனக்கு விருப்பமில்லை என ஏ.கே. அந்தோனி முன்னாள் முதல்வர் உமன் சாண்டி, மாநிலத் தலைவர் சுதாகரன் மற்றும் பிற மூத்த தலைவர்களிடம் தெரிவித்துவிட்டார். 

மாநிலங்களவைப் பதவிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்வதில் கேரள காங்கிரஸில் சிக்கல் எழுந்தது. எம். லிஜுவை அறிவிக்க வேண்டும் என கேரளத்திலுள்ள காங்கிரஸ் தெரிவிக்கிறது. தேசிய தலைவர்கள் கிருஷ்ணன் ஸ்ரீனிவாசனை அறிவிக்க விரும்புகின்றனர்.

இதனால், வேட்பாளரை இறுதி செய்வது குறித்து தில்லியிலுள்ள கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சுதாகரன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சந்திப்புக்குப் பிறகு சுதாகரன் கூறியதாவது:

"மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பாளரைப் பரிந்துரைப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்தேன். இருவரும் இளைஞர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.