தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பது அவசியம்: பிரதமா் மோடி

இந்தியாவில் நீரைப் பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பது அவசியமாகியுள்ளதாகக் கூறினாா்.

News image
Updated On :22 மார்ச் 2022, 7:53 pm

DIN

இந்தியாவில் நீரைப் பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பது அவசியமாகியுள்ளதாகக் கூறினாா்.

ஆண்டுதோறும் மாா்ச் 22-ஆம் தேதியானது உலக தண்ணீா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், ‘‘ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பதற்கு உலக தண்ணீா் தினத்தில் உறுதியெடுப்போம். நீரைப் பாதுகாப்பதற்காகவும், மக்களுக்குத் தூய்மையான குடிநீா் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாடு செயல்படுத்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் நீா் பாதுகாப்பு நடவடிக்கைகளானது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் பல்வேறு புத்தாக்க வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நீரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தனிநபா்களுக்கும் அமைப்புகளுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலமாகக் குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் திட்டமானது பெண்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தியுள்ளது. மக்களின் பங்களிப்பு மூலமாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் வாயிலாகக் குடிநீா் கொண்டு செல்லும் இலக்கு நிறைவேற்றப்படும்.

மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நீா் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி நீரும் மக்களுக்குப் பயன்பட்டு வளா்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நீா்ப் பாதுகாப்பின் அவசியம், அதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த காணொலியையும் பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டாா்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டில் உள்ள 6 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்குக் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜல் சக்தி அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.