
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வடக்கு அந்தமானின் திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.4 அலகுகளாகப் பதிவானது
இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.