நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் 9 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உதய்பூர்: காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் 9 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில்  காங்கிரஸ் கட்சியின்  இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். பிரதமர் மோடியும், அவரைச் சார்ந்தவர்களும் அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு என்ற முழக்கத்தை  முன்வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

நாட்டில் சமமான குடிமக்களாக இருக்கும் சிறுபான்மையினரை மிருகத்தனமாக நடத்துகிறார்கள் என்று சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

அடுத்த சில நாள்களில் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com