மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்ட்கா தீ விபத்து: தப்பிக்க சிரமம் தந்த கட்டடத்தின் ஒற்றை வழிப்பாதை தீயணைப்பு அதிகாரி தகவல்

முன்ட்கா பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நான்கு மாடிக் கட்டடத்தில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஒற்றை வழி பாதை மட்டுமே இருந்ததால் விபத்தில் சிக்கிய பலரும் தப்பிப்பதை கடினமாக்கியதாகவும், இது மனித உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக

News image
தில்லியில் முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
Updated On :14 மே 2022, 6:30 pm

DIN

முன்ட்கா பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நான்கு மாடிக் கட்டடத்தில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஒற்றை வழி பாதை மட்டுமே இருந்ததால் விபத்தில் சிக்கிய பலரும் தப்பிப்பதை கடினமாக்கியதாகவும், இது மனித உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கலாம் எனவும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேற்கு தில்லி முன்ட்கா பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 27 போ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

பலா் மாயமாகியுள்ளனா். காயமடைந்த பலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கட்டடத்தில் இருந்த ஒற்றை நுழைவு மற்றும் வெளியேறும் பாதையால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கான ஏற்படக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது:

தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்திற்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெறப்படவில்லை.

சிசிடிவி கேமரா மற்றும் ரெளட்டா் தயாரிப்பு மற்றும் உதிரிபாகம் இணைப்பு நிறுவனத்தின் அலுவலகம் உள்ள கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தற்போது மீட்புப் பணி முடிந்துவிட்டது. கட்டடடத்தில் இருந்து வெளியேறுவதற்கும், நுழைவதற்கும் ஒற்றை பாதை இருந்ததுதான் இவ்வளவு பெரும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகும்.

சனிக்கிழமை காலை மேலும் சில எரிந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. இறப்பு எண்ணிக்கை 30 வரை உயரக்கூடும். சடலம் எரிந்த நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.

கட்டடத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு குறுகிய படிக்கட்டு மட்டுமே இருந்தது. இது தீ விபத்தில் சிக்கியவா்கள் தப்பிப்பதை கடினமாக்கிவிட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.