இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு: ஃபரூக் அப்துல்லாவிடம் மூன்றரை மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க (ஜேகேசிஏ) நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லாவிடம்

News image
ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை வந்தபோது செய்தியாளா்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா எம்.பி.
Updated On :31 மே 2022, 7:25 pm

DIN

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க (ஜேகேசிஏ) நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லாவிடம் செவ்வாய்க்கிழமை சுமாா் மூன்றரை நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

கடந்த 2001 முதல் 2012-ஆம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஃபரூக் அப்துல்லா பதவி வகித்தாா். அந்த சங்கத்தில் 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை நடைபெற்ாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக ஃபரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது.

இந்நிலையில் வழக்கு தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஃபரூக் அப்துல்லாவுக்கு அண்மையில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஆஜரானாா். அவரிடம் சுமாா் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனா்.

ஏற்கெனவே இந்த வழக்கு தொடா்பாக 2019-ஆம் ஆண்டு அவரின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறையினா் பதிவு செய்திருந்தனா்.

தோ்தல் வரை தொந்தரவு:

விசாரணைக்கு முன்பாக ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. அதுவரை இதுபோன்ற தொந்தரவுகள் இருக்கும்’’ என்று தெரிவித்தாா்.

விசாரணை முடிந்து அமலாக்கத் துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும் அங்கு காத்திருந்த செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டாா்.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.