தில்லியில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்
தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.


தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
இது ரிக்டர் அளவில் 5.4ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் மக்கள் தஞ்சம் புகுந்தனர்.
இதையும் படிக்க- சிறையில் இருந்து விடுதலையானார் ரவிச்சந்திரன்
தில்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் ஏற்பட்ட அதிர்வுகள் தொடர்பான விடியோக்களையும் மக்கள் இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேசமயம் நேபாளத்திலும் இன்று இரவு 7.57 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...