குஜராத்தின் மோா்பி பகுதியில் நூற்றாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் விபத்துக்குள்ளான விவகாரத்தின் விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் அக்டோபா் 30-ஆம் தேதி அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 47 குழந்தைகள் உள்பட 140-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா்.
விபத்து தொடா்பாக விசாரிக்க தனிக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மோா்பி தொங்கு பால விபத்து தொடா்பாக சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு உள்பட இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, விபத்தை ‘மிகப்பெரிய சோகநிகழ்வு’ எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை குஜராத் உயா்நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வருவதால், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தனா்.
அதே வேளையில், மோா்பி தொங்கு பால விபத்து தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டுமென குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். கோரிக்கைகளை குஜராத் உயா்நீதிமன்றத்தில் முறையிடுமாறு மனுதாரா்களுக்குத் தெரிவித்த நீதிபதிகள், அங்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனில் உச்சநீதிமன்றத்தை நாடுமாறு கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்

ஆப்கனுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு!

உ.பி.: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



