தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோவாவில் போலி 'கால் சென்டர்': அமெரிக்கர்களுக்கு விபூதி அடித்த 6 பேர் கைது!

கோவாவில் போலி 'கால் சென்டர்' மையத்தில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, ஆறு பேரை கைது செய்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :24 நவம்பர் 2022, 3:07 pm

DIN

பனாஜி: கோவாவில் போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களை ஏமாற்றிய 6 பேரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

இவர்கள் வங்கிக் கடன்களுக்கான ஒப்புதல், மருத்துவ ரசீதுகள் வாங்கித் தருவதாகக் கூறி அமெரிக்கர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுபற்றி காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

"குற்றப்பிரிவு ஆய்வாளர் விஷ்வஜித் தலைமையிலான குழு சின்ச்வாடாவில் சோதனை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களிடமிருந்து 6 லேப்டாப்கள், மொபைல் ஃபோன்கள் என மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.