பனாஜி: கோவாவில் போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களை ஏமாற்றிய 6 பேரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
இவர்கள் வங்கிக் கடன்களுக்கான ஒப்புதல், மருத்துவ ரசீதுகள் வாங்கித் தருவதாகக் கூறி அமெரிக்கர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுபற்றி காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
"குற்றப்பிரிவு ஆய்வாளர் விஷ்வஜித் தலைமையிலான குழு சின்ச்வாடாவில் சோதனை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களிடமிருந்து 6 லேப்டாப்கள், மொபைல் ஃபோன்கள் என மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று கூறினார்.