அதாவது, ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டது மே மாதம். அவரது உடல்பாகங்களை அஃப்தாப் புது தில்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியது கடந்த அக்டோபர் மாதத்தில், ஆனால், இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அஃப்தாப் கைது செய்யப்பட்டதோ நவம்பர் மாதம். இதனால், மிகக் குறைந்த காலமே சேமிப்புத் திறன் கொண்ட சிசிடிவி காட்சிப் பதிவுகள் கிடைக்காமல் காவல்துறையினர் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு, மிகத் துல்லியமாக அஃப்தாப் திட்டமிட்டுக் கொலை செய்திருப்பதும், உடல் பாகங்களை அப்புறப்படுத்தியதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.