எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

எய்ம்ஸ் சர்வரில் சைபர் தாக்குதல்: விஐபி நோயாளிகளின் தகவல்கள்?

தில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலிலிருந்து, மருத்துவமனை தகவல்களை மீட்க முடியாமல் இரண்டாவது நாளாக அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

News image

எய்ம்ஸ் சர்வரில் சைபர் தாக்குதல்: விஐபி நோயாளிகளின் தகவல்கள்?

Updated On :26 நவம்பர் 2022, 10:49 am


புது தில்லி; தில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலிலிருந்து, மருத்துவமனை தகவல்களை மீட்க முடியாமல் இரண்டாவது நாளாக அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களின் சிகிச்சை தகவல்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கில் நீடிக்கிறது.

சர்வரின் பாதுகாப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வர் மீது நடத்தப்பட்ட சர்வர் தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் தகவல்கள் பதியப்பட்ட கணினி மற்றும் பேக்அப் சர்வர்கள் அனைத்திலிருந்தும் தகவல்கள் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டுள்ளன.

தகவல்களை திருடிய கும்பலிடமிருந்து, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், தகவல்களை திரும்பப் பெறுவது குறித்தும் மின்னஞ்சல் வாயிலாக எய்ம்ஸ் மருத்துவமனையை தொடர்புகொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அனைத்துத் தகவல்களையும் பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. தற்போதைக்கு அனைத்து விதமான அவசர, வழக்கமான சிகிச்சை, மருத்துவ பரிசோதனை நிலையங்களின் தகவல்கள் அனைத்தும் மனிதர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும், பாதுகாப்புக் குறைபாட்டுக்குக் காரணமான இரண்டு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், பல்வேறு பிரிவுகளின் கீழ், சர்வரை ஹேக் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை காலை 6.45 மணிக்கு எய்ம்ஸ் சர்வரில் ஊடுருவிய ஹேக்கர்கள், தகவல்கள் அனைத்தையும் திருடியுள்ளனர். இதனால், புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் பதிவு முதல், பரிசோதனை முடிவுகள், ஆன்லைனில் நோயாளிகளுடன் சந்திப்பு உள்பட அனைத்துமே முடங்கிப்போனதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.