திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

2வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.3% : மத்திய அரசு

2022-2023 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

News image
Updated On :30 நவம்பர் 2022, 7:24 pm IST

 
2022-2023 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவிகிதமாக இருந்தது.

இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2021-22 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஜிடிபி  20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

2021 ஜூலை - செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.38.17 கோடியாக உள்ளது.

2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  ரூ.64.95 லட்சம் கோடியாக ஜிடிபி மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 51.27 லட்சம் கோடியாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.