மக்களிடையே சண்டையை மூட்டுவதுதான் காங்கிரஸின் வேலை: அமித் ஷா
ஹிமாசலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் கட்சியினை மக்களிடம் சண்டையை வளர்க்கும் கட்சியென கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.


ஹிமாசலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் கட்சியினை மக்களிடம் சண்டையை வளர்க்கும் கட்சியென கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
68 உறுப்பினா்களைக் கொண்ட ஹிமாசல பிரதேச பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஹிமாசலில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ளன. ஆளும் கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த வரலாற்றை மாற்றும் நோக்குடன் பாஜக களமிறங்கியுள்ளது.
பாஜகவின் தேர்தல் பாடலான ‘ஏக் பார் பிஜேபி, பார் பார் பிஜேபி’ (ஒருமுறை பாஜக, மீண்டும் மீண்டும் பாஜக) தொடக்கி வைத்த அமித் ஷா பேசியதாவது:
ஹிமாசலில் புதிய வழக்கத்தை பாஜக நடைமுறைப்படுத்தும். மீண்டும் பாஜக ஆட்சியினை கைப்பற்றும். 55 வருடமாக தவித்து வந்த பழங்குடியின மக்களுக்கு உதவியவர் பிரதமர் மோடி.
மக்களிடையே விரோத்தினை வளர்க்காமல் காங்கிரஸ் ஒருபோதும் அமைதியாக இருக்காது. காங்கிரசின் வேலையே மக்களிடையே பிரச்சினையை உருவாக்குவதுதான். ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக உழைப்பவர். ஹிமாசல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...