புது தில்லி: இந்தியாவுக்கு வரும் 3 வாரங்கள் அபாயகரமானவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பரவும் வேகம் அதிகம் கொண்ட புதிய வகை ஒமைக்ரானின் உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் சீனா மற்றும் அமெரிக்கா, ஐரோக்கிய நாடுகளில் தற்போது கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து வரும் பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சிதரும் தகவல் வெளியானது
அதிகாரப்பூர்வமாக வெளியான தகவலில், குஜராத் பயோடெக்னாலஜி ஆய்வுக் கூடத்தல் முதல் பிஎஃப்.7 வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பிஏ.5 வகையின் துணைப்பிரிவான பிஎஃப்7 வகை வைரஸ்தான் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதையடுத்து, நாட்டில் பிஎஃப்.7 வகை வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அது மிகவும் வேகமாகப் பரவும் திறன் கொண்டதா என்றும், அதனால் நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்கிறதா என்பதும் தீவிரமாகக் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீனாவில் முதல் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு வாரத்துக்குள் அங்கு கரோனா பரவல் அதிகரித்து, மீண்டும் பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கும்முறை தொடங்கிவிட்டது.
தற்போது நாட்டில் நாள்தோறும் 2000க்கும் குறைவான கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலைடியில், கேரளம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் ஒரு சில வாரங்களாக பாதிப்பு சற்று அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



