ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

காஸியாபாத்தில், குற்றவாளிகள் செய்த கொடுமை நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

News image

காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

Updated On :19 அக்டோபர் 2022, 9:08 am

PTI


புது தில்லி: காஸியாபாத்தில், 38 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் செய்த கொடுமை நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

தில்லியைச் சேர்ந்த பெண் கடத்தப்பட்டு, 2 நாள்களுக்குப் பின் ஒரு கோணிப்பையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து மகளிர் ஆணையம் காவல்துறையினருக்கு அனுப்பியிருக்கும் நோட்டீஸில், கடந்த 16ஆம் தேதி தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவுக்குச் செல்ல காஸியாபாத்தில் ஆட்டோ ரிக்சாவுக்காக காத்திருந்த போது, அவ்வழியாக வந்த நான்கு பேர் காரில் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

அவர்களுடன் மேலும் ஒருவரும் சேர்ந்து அப்பெண்ணை இரண்டு நாள்களாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது பிறப்புறுப்பில் இரும்புக் கம்பி நுழைக்கப்பட்டிருந்தது.அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதன் நகல் மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மகளிர் ஆணையம் தில்லி காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்க, மிகவும் பாதிக்கத்தக்கதாக அமைந்துவிட்டதாகவும், பெண்ணுக்கு குற்றவாளிகள் செய்த கொடுமைகள் நிர்பயா சம்பவத்தையே நினைவுபடுத்துவதாகவும் மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பெண்களும் குழந்தைகளும் இதுபோன்ற மிகக் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டும் என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.