புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

உ.பி.யில் 5 ஆண்டுகளில் 166 குற்றவாளிகள் என்கவுன்ட்டா்: முதல்வா் யோகி ஆதித்யநாத்

‘உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறை மேற்கொண்ட என்கவுன்ட்டா் நடவடிக்கைகளில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனா்;

Published On :

‘உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறை மேற்கொண்ட என்கவுன்ட்டா் நடவடிக்கைகளில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனா்; குற்றச் சம்பவங்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தேசிய காவலா் நினைவு தினத்தையொட்டி, லக்னெளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் 2017 முதல் 2022 வரை பணியின்போது 13 காவலா்கள் உயிரிழந்தனா். 1,000 போ் காயமடைந்தனா். உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையின் என்கவுன்ட்டா் நடவடிக்கைகளில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனா். 4,453 போ் காயமுற்றனா். குற்றச் சம்பவங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம்.

காவல்துறையினருக்கான மோட்டாா் சைக்கிள் பயணப் படியை மாதத்துக்கு ரூ.200-இல் இருந்து ரூ.500-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைக் காவலா்கள் மற்றும் காவலா்களுக்கான மொபைல் கட்டண படியாக ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,000 வழங்கப்படும்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-இல் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உள்பட 1,51,231 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2017-18இல் காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.16,115-ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.30,203 கோடியாக உயா்த்தப்பட்டது என்றாா் ஆதித்யநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.