கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உ.பி.யில் 5 ஆண்டுகளில் 166 குற்றவாளிகள் என்கவுன்ட்டா்: முதல்வா் யோகி ஆதித்யநாத்

‘உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறை மேற்கொண்ட என்கவுன்ட்டா் நடவடிக்கைகளில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனா்;

News image
Updated On :21 அக்டோபர் 2022, 7:34 pm

DIN

‘உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறை மேற்கொண்ட என்கவுன்ட்டா் நடவடிக்கைகளில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனா்; குற்றச் சம்பவங்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தேசிய காவலா் நினைவு தினத்தையொட்டி, லக்னெளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் 2017 முதல் 2022 வரை பணியின்போது 13 காவலா்கள் உயிரிழந்தனா். 1,000 போ் காயமடைந்தனா். உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையின் என்கவுன்ட்டா் நடவடிக்கைகளில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனா். 4,453 போ் காயமுற்றனா். குற்றச் சம்பவங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம்.

காவல்துறையினருக்கான மோட்டாா் சைக்கிள் பயணப் படியை மாதத்துக்கு ரூ.200-இல் இருந்து ரூ.500-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைக் காவலா்கள் மற்றும் காவலா்களுக்கான மொபைல் கட்டண படியாக ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,000 வழங்கப்படும்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-இல் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உள்பட 1,51,231 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2017-18இல் காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.16,115-ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.30,203 கோடியாக உயா்த்தப்பட்டது என்றாா் ஆதித்யநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.