மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு! உத்தரகண்டில் பல்வேறு திட்டங்கள் தொடக்கம்

உத்தரகண்ட் கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார். 

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:21 am

DIN

உத்தரகண்ட் கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் விமான நிலையம் வந்தார். அவரை மாநில ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றனர். 

பின்னர் கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி, ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சென்றார். 

Story image

ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் கடந்த 2013 வெள்ளத்தில் சேதமடைந்ததையடுத்து மறுசீரமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. 

கேதார்நாத் ரோப் சேவை உள்பட உத்தரகண்ட் மாநிலத்தில் ரூ. 3,400 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும் கேதார்நாத்தில் மந்தாகினி அஷ்டபதி மற்றும் சரஸ்வதி அஷ்டபதி பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். 

தொடர்ந்து பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.