தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்திரப்பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார். அயோத்தியில் நடைபெறும் 6-ஆவது தீப உற்சவ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்களை 22,000-க்கும் அதிகமான பக்தா்கள் ஏற்றி வழிபாடு நடத்த உள்ளனா்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் தீபாவளி பண்டிகையையொட்டி தீப ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 6வது ஆண்டாக சரயு நதிக்கரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார். மாலை 6.30 மணியளவில் தீப நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார்.
முன்னதாக ராமா் கோயில் கட்டுமானப் பணிகளைப் பிரதமர் மோடி பார்வையிட்டு, ராமா் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளாா்.