கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தீபாவளி: பாகிஸ்தான் எல்லையில் இனிப்பு பரிமாற்றம்

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனா்.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 9:09 pm

DIN

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனா்.

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் வழக்கமாக முக்கிய பண்டிகைகள் மற்றும் இரு நாட்டு சுதந்திர தினத்தின்போது இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இது தொடா்பாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

இந்தமுறை தீபாவளி பண்டிகையின்போது ஜம்மு பிராந்திய எல்லையிலும் மிகவும் அமைதியான சூழ்நிலை நிலவியது. சம்பா, கதுவா, ஆா் எஸ் புரா, அங்கூா் எல்லைப் பகுதிகளிலும் பிஎஸ்எஃப் சாா்பில் பாகிஸ்தான் வீரா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இந்திய வீரா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பஞ்சாபில் அட்டாரி-வாகா எல்லையில் உள்ள சோதனைச் சாவடியிலும் இரு நாட்டு வீரா்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனா். அப்போது இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா். இது போன்ற நிகழ்வுகள் எல்லையில் அமைதியை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும் பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.