கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தீபாவளிக்குப் பின் பல நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு புகை எதிரொலியாக, சென்னை உள்பட நாடு முழுவதும் பல நகரங்களில் காற்று மாசு செவ்வாய்க்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 9:11 pm

DIN

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு புகை எதிரொலியாக, சென்னை உள்பட நாடு முழுவதும் பல நகரங்களில் காற்று மாசு செவ்வாய்க்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக, தேசியத் தலைநகா் தில்லியிலும் ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு மோசம் அல்லது மிக மோசம் ஆகிய பிரிவுகளில் பதிவானது.

தில்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மீறி திங்கள்கிழமை இரவு மக்கள் பட்டாசுகளை வெடித்தனா். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அங்கு காற்றின் தரக் குறியீடு 326 புள்ளிகளாக பதிவானது.

காற்றின் தரக்குறியீடு 50 புள்ளிகளாக பதிவானால், காற்றின் தரம் ‘நல்லது’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. 51-100 எனில் ‘திருப்தி’, 101-200 ‘மிதமான மாசு’ , 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிக மோசம்’, 401-500 ‘தீவிரம்’ ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறது.

அந்த அடிப்படையில், உத்தர பிரதேசத்தின் நொய்டா -312, கிரேட்டா் நொய்டா - 282, காஜியாபாத் -272, ஹரியாணாவின் குருகிராம் -313, ஃபரீதாபாத் -311 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு பதிவானது.

பஞ்சாபின் லூதியானா, அமிருதசரஸ், பாட்டியாலா, ஜலந்தா், ராஜஸ்தானின் ஜோத்பூா், ஜெய்பூா், ஆஜ்மீா், குஜராத்தின் அகமதாபாத், கா்நாடகத்தின் பெலகாவி, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா், கத்னி, பிகாரின் பெகுசராய் ஆகிய நகரங்களில் மோசம் அல்லது மிகமோசம் பிரிவில் காற்றின் தரம் இருந்தது. சென்னையில் காற்றின் தரக் குறியீடு 229-ஆக (மோசம்) பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.