மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

கார், கிரேன் எல்லாம் வைத்து சினிமாவை விஞ்சும் ஃபோட்டோ ஷூட் நடத்திய மணமக்கள்

கார், கிரேன் எல்லாம் வைத்து சினிமாவை விஞ்சும் வகையில் ப்ரீ-ஃபோட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள் மணமக்கள். 

கார், கிரேன் எல்லாம் வைத்து சினிமாவை விஞ்சும் ஃபோட்டோ ஷூட் நடத்திய மணமக்கள்

Published On :1 பிப்ரவரி 2024, 4:10 pm IST


திருமணத்துக்கு முன்பு ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் கூட எடுக்க மாட்டோம் என்று கூறி வந்த தலைமுறை மாறி, தற்போது கார், கிரேன் எல்லாம் வைத்து சினிமாவை விஞ்சும் வகையில் ப்ரீ-ஃபோட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள் மணமக்கள்.

திருமணத்தின் போது புகைப்படம் எடுப்பதும், பிறகு திருமணத்துக்குப் பிறகு வீட்டில் இருப்பதுபோல ஒரு புகைப்பட ஆல்பம் போடுவதும், அதையும் தாண்டி, திருமணத்துக்கு முன்பே ப்ரீ ஃபோட்டோ ஷூட் நடத்துவது என்று புகைப்பட ஆல்பங்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது.

அதுவும் ஏதோ பூங்கா, கடற்கரை என ரம்மியமான இடங்களில் புகைப்படங்கள் எடுத்து வந்தார்கள் மணமக்கள். இதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு விடியோ வெளியாகியிருக்கிறது.

அதில், ஒரு காரை மணமக்கள் பைக்கில் தாண்டுவது போல, கிரேன் வைத்து பைக்கைத் தூக்கி விடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது சினிமா காட்சிகளையே விஞ்சும் வகையில் புகைப்படம் எடுத்திருப்பதாக மக்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விடியோக்களை பார்க்கும் இளசுகள் பலரும் லைக்குகளை அளித்து வருகிறார்கள். தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

நன்றி : Best of the Best டிவிட்டர் பக்கம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.