குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தானது நேற்று (செப்டம்பர் 10) இரவு 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. ரசாயனப் பொருட்கள் அடங்கிய கண்டெய்னரில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தொழிற்சாலையின் மற்ற இடங்களுக்கும் தீ பரவியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: “ முதல் நாளில் இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காணவில்லை. பின்னர் இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. அதேபோல இந்த தீ விபத்தில் 20க்கும் மேலானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயிணைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்” என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



