ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

லக்கிம்பூர் தலித் சகோதரிகள் உடல் கூறாய்வு முடிவுகள் வெளியானது

தலித் சகோதரிகள் பலியான சம்பவத்தில், இருவரும் பலாத்காரத்துக்கு உள்ளாகி, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது உடல் கூறாய்வு முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

லக்கிம்பூர் தலித் சகோதரிகள் உடல் கூறாய்வு முடிவுகள் வெளியானது

Updated On :15 செப்டம்பர் 2022, 5:34 pm IST

லகிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் இரண்டு தலித் சகோதரிகள் பலியான சம்பவத்தில், இருவரும் பலாத்காரத்துக்கு உள்ளாகி, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது உடல் கூறாய்வு முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நிகாசன் பகுதியில் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடல் கூறாய்வு முடிந்து, 14 மற்றும் 17 வயதாகும் இரண்டு சிறுமிகளின் உடல்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இரு சிறுமிகளின் இறுதிச் சடங்குகள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரிகள் இருவரின் உடல்களும், அவர்களது வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கரும்புத் தோட்டத்திலிருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

லகிம்பூர் கேரி காவல்துறை கண்காணிப்பாளர் இது குறித்துப் பேசுகையில், நள்ளிரவு முழுக்க நடந்த தேடுதல் வேட்டையில் குற்றத்தில தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இரண்டு சகோதரிகளுடனும் ஜுனைத், சோஹாலி இருவரும் பழகி வந்துள்ளனர். இவர்களை சந்திக்க சகோதரிகள் வீட்டை விட்டுக் கிளம்பியிருக்கிறார்கள். பிறகு அவர்களை காணவில்லை. சடலமாகத்தான் கண்டெடுக்கப்பட்டனர்.

இருவரும் கடத்தப்படவில்லை என்றும், இரண்டு பேரும் விரும்பியே இளைஞர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், சகோதரிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை ஜுனைதும் சோஹாலியும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இவர்களை மரத்தில் தொங்க விட உதவி செய்த இளைஞர்கள் மற்றும், இவர்களை சகோதரிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்த பக்கத்து வீட்டு இளைஞர் என ஆறுர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.