பகத்சிங் பிறந்த நாளில் ரத்த தானம் செய்யுங்கள்: அரவிந்த் கேஜரிவால்

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் ரத்த தானம் செய்யுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
பகத்சிங் பிறந்த நாளில் ரத்த தானம் செய்யுங்கள்: அரவிந்த் கேஜரிவால்
Published on
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் ரத்த தானம் செய்யுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி கொண்டப்பட உள்ளது. இந்நிலையில், பகத்சிங் பிறந்த தினத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்யுங்கள் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறிருப்பதாவது: “ நாட்டின் தலைநகர் தில்லியில் 50க்கும் அதிகமான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி பகத்சிங் பிறந்த நாளில் ரத்த தானம் செய்ய வேண்டும். பகத்சிங்கின் கொள்கைகள் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள தில்லி மற்றும் பஞ்சாப் அரசினால் பின்பற்றப்பட்டு வருகிறது. உங்களது இருப்பிடங்களில் ரத்த தான முகாம்கள் இல்லாவிட்டாலும், நீங்கள் முகாம்கள் ஏற்பாடு செய்ய முயற்சியினை முன்னெடுக்க வேண்டும். ரத்த தானம் செய்வது தான் இளம் வயதிலேயே நாட்டுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த பகத்சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் அளிக்கும் சிறப்பான மரியாதையாக இருக்கும். ஆம் ஆத்மி மட்டுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்வதை முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com