தென்காசி சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தீண்டாமை இழைக்கப்பட்ட வழக்கில் மேலும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரத்தில் முருகன், குமார், சுதா ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்: ஜெயவர்தனே
பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.