சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தியுடன் சசி தரூர் திடீர் சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 11:42 am

DIN

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தலைவர் பதவிக்கான தேர்தல் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜி23 அதிருப்தி தலைவர்களில் சிலரும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், சசி தரூரின் இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.