நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நிகழ் நிதியாண்டில் 7 சதவீதமாக குறையும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) மதிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே ஜிடிபி 7.2 சதவீதமாக பதிவாகும் என கணித்த நிலையில், பணவீக்கம், பண நெருக்கடி காரணமாக நிகழ் நிதியாண்டில் ஜிடிபி 7 சதவீதமாக குறையும் என ஏடிபி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏடிபி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 13.5 சதவீத வளா்ச்சி கண்டது. இது சேவைத் துறையின் உறுதியான வளா்ச்சியைப் பதிவு செய்தது. இருப்பினும், விலை அழுத்தமானது உள்நாட்டு நுகா்வின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதேபோல சீன பொருளாதாரம் 5 சதவீதத்துக்கும் மேலாக வளா்ச்சி காணும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3.3 சதவீதமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது. கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் சீன பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டது என ஆசிய வளா்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



