சாலை தடுப்பில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறிய கொடூரம்: தில்லியில் 4 பேர் பலி

தில்லியில் சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை தடுப்பில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறிய கொடூரம்: தில்லியில் 4 பேர் பலி
Published on
Updated on
1 min read

தில்லியில் சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது நேற்றிரவு சிலர் தூங்கியுள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவு 1.51 மணியளவில் அவ்வழியே அதிவேகமாக சென்ற லாரி ஒன்று  மின் கம்பத்தில் மோதி, தடுப்புச் சுவர் மீது தூங்கிய 6 பேர் மீது ஏறியுள்ளது.

இதில், ஒரு இளைஞர் உள்பட 4 பேர் பலியான நிலையில், 16 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தில்லி போக்குவரத்து கழக பணிமனையில் அருகே விபத்தை ஏற்படுத்திய லாரி டிஎல்எஃப் நோக்கி நிற்காமல் சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com