அசாம்: பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் மாயம்!

அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
அசாம்: பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் மாயம்!
Published on
Updated on
1 min read

அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து துப்ரியின் கூடுதல் துணை ஆணையர் மனாஷ் குமார் சைக்கியா கூறுகையில், 

பிரம்மபுத்திரா ஆற்றில் கட்டுமானத்தில் உள்ள துப்ரி-புல்பரியா பாலத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள அடபாரி என்ற இடத்தில் படகு சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த பாலத்தின் மீது படகு மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தில் 6 பேர் மாயமாகியுள்ளனர். படகில் சுமார் 50 பேர் இருந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 15 பேரை மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com