இதில், பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரு இடங்கள் வான்வெளியின் தன்மைக்கு ஒப்பீட்டளவில் மிகவும் சாத்தியமானதாக உள்ளன. குறிப்பாக, இயற்கைத் தடைகளற்றவையாக உள்ளன. இருப்பினும், மனிதத் தடைகள் உள்ளன. ஏரிகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற இடையூறுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடையாக இருப்பவை. இதனால், மேற்பரப்பு தடை வரம்பு ஆய்வு (ஓஎல்எஸ்), தள ஆய்வு போன்ற முன் சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கை தமிழக அரசுக்கு (டிட்கோ) அனுப்பப்பட்டுள்ளது. இதில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சிந்தியா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.