தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Published On :

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், நடக்கும் இந்த கூட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. 

நீதி ஆயோக்கின் 7-ஆவது நிா்வாகக் குழு கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

இக்கூட்டத்தில் மாற்றுப்பயிா்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல்,  உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

கடந்த 2019, ஜூலை மாதத்துக்குப் பின் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடைபெறுகிறது. கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நேரடியாக நடைபெறாமல் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.