திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 11:21 am IST

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், நடக்கும் இந்த கூட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. 

நீதி ஆயோக்கின் 7-ஆவது நிா்வாகக் குழு கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

இக்கூட்டத்தில் மாற்றுப்பயிா்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல்,  உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

கடந்த 2019, ஜூலை மாதத்துக்குப் பின் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடைபெறுகிறது. கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நேரடியாக நடைபெறாமல் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.